சென்னை | கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது


சென்னை: மணிகண்டன் (30) என்பவர் செம்​பி​யம் பகுதியில் குளிர்​பான விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 11-ம் தேதி கடையில் இருந்த போது ஒருவர் மணிகண்​டனை கத்தி​யைக் காட்டி மிரட்டி, தாக்கி பணத்தை பிடுங்கிச் சென்​றார்.

இதுகுறித்து செம்​பியம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். பணத்தை பிடுங்கி சென்றது வியாசர்​பாடி கக்கன்ஜி காலனியைச் சேர்ந்த அவினாஷ் (23) என்பது தெரிய​வந்தது. அவினாஷை போலீ​ஸார் கைது செய்​தனர் அவினாஷ் மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்​குகள் உள்ளதும். இவர் செம்​பியம் காவல் நிலைய சரித்​திரப் பதிவேடு குற்​றவாளி என்​பதும் தெரிய​வந்​தது.

x