கிளாம்பாக்கம் | பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை: 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது


கிளாம்பாக்கம்: கிளாம்​பாக்கம் பேருந்து நிலை​யத்​தில் பேருந்​துக்காக காத்​திருந்த பெண்​ணைக் கடத்தி, பாலியல் தொல்லை அளித்த விவகாரத்​தில் 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்​யப்​பட்​டுள்ள​னர். மேற்கு வங்கத்​தைச் சேர்ந்த 19 வயது இளம்​பெண் சேலத்​தில் இருந்து சென்னை மாதவரத்​தில் உள்ள தனது தோழி​யின் வீட்டுக்கு வருவதற்காக கிளாம்​பாக்கம் பேருந்து நிலை​யத்​தில் கடந்த 3-ம் தேதி இரவு காத்​துக் கொண்​டிருந்​தார்.

அப்போது ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தான் மாதவரத்​தில் இறக்கி விடு​வதாக கூறி அந்த பெண்ணை வலுக்​கட்​டாயமாக ஆட்டோ​வில் ஏற்றிய​தாகக் கூறப்​படு​கிறது. ஆட்டோ வண்டலூர் மீஞ்​சூர் வெளிவட்ட சாலை​யில் சென்​ற​போது ஆட்டோ ஓட்டுநர் நண்பர்​களுக்கு போன்​செய்து வரச் சொல்​லி​யுள்​ளார். அப்போது வண்டலூர் அருகே அதே ஆட்டோ​வில் வேறு இருவரும் ஏறியுள்​ளனர். அப்போது திடீரென இளம் பெண்​ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்​ததாக கூறப்​படு​கிறது.

இதையடுத்து மேற்கு வங்கப் பெண், தனது தோழிக்கு குறுஞ்​செய்தி மூலம் தகவல் தெரி​வித்​துள்ளார். அவர் காவல் கட்டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, போலீ​ஸார் அந்த ஆட்டோவை பின் தொடர்ந்​துள்ளனர். இதைத் தொடர்ந்து மதுர​வாயல் அருகே மாதா கோயில் தெரு​வில் அந்த பெண்ணை இறக்கி விட்டு விட்டு அங்கிருந்து 3 பேரும் தப்பி ஓடினர்.

இதையடுத்து அப்பெண் மீட்​கப்​பட்​டார். இந்த சம்பவம் குறித்து வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரித்​தனர். இந்நிலை​யில் இதுதொடர்​பாக, முத்​தமிழ்​செல்​வன், தயாளன் என்ற 2 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். மற்
றொருவரை போலீ​ஸார் தேடி வருகின்​றனர்.

முத்​தமிழ் செல்வன் என்பவர் பெண்ணை வலுக்​கட்​டாயமாக ஆட்டோ​வில் ஏற்றியவர் என்பது தெரிந்​தது. தயாளன் மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீ​ஸார் விரட்​டிப் பிடிக்​கும்​போது கீழே ​விழுந்து அவர் ​கால் ​முறிந்​துள்ளது. மேலும் ஒரு​வரிடம் தொடர்ந்து ​விசாரணை நடை​பெற்று வரு​கிறது என ​போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்​.

x