சென்னை: பெரியமேட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்களை வைத்திருந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னை பெரியமேடு நேவல் ஆஸ்பிடல் சாலை கால்பந்து மைதானம் அருகே பெரியமேடு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் சாக்கு பையுடன் வந்த அண்ணாநகரை சேர்ந்த ஜுல்ஹஸ்னன் (38), காஞ்சிபுரத்தை சேர்ந்த ஷகில் அகமது (36) ஆகிய 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
சாக்கு பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17.65 கிலோ குட்கா புகையிலை பாக்கெட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.