கோவையில் காவல் நிலையம் முன்பு தீக்குளித்தவர் உயிரிழப்பு


கோவை கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சிவா நகர் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன், மணிபாரத் ஆகியோரை போீலஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் மணிபாரத்தின் தந்தையான ஆட்டோ ஓட்டுநர் சேகர்(45), கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்தார். தனது மகன் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். திடீரென காவல் நிலையத்துக்கு வெளியே வந்த சேகர், தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

உடனடியாக தீயை அணைத்த போலீஸார், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீக்குளித்த சேகர், பாரத் சேனா அமைப்பில் பொறுப்பில் இருந்ததால், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சேகர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு சய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

x