செங்கல்பட்டு - இரும்புலிச்சேரி தற்காலிக தரைப்பாலம் சேதம் - கிராம மக்கள் அவதி!


பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தூண்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

செங்​கல்​பட்டு: திருக்​கழுக்​குன்றம் வட்டத்​துக்​கு உட்​பட்ட நெரும்​பூர் கிராமத்​தில் இருந்து இரும்​புலிச்​சேரி, எடையாத்​தூர் ஆகிய கிராமங்​களுக்கு செல்​லும் வகையில், பாலாற்றின் குறுக்கே தரைப்​பாலம் அமைந்​திருந்​தது. இதன்​மூலம், மேற்​கண்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி செல்​லும் மாணவர்கள் மற்றும் விவசா​யிகள் நகரப்​பகு​திக்கு சென்று திரும்​பினர். இந்நிலை​யில், 2015-ம் ஆண்டு பெய்த பெரு​மழை​யில் பாலாற்றில் ஏற்றபட்ட வெள்​ளத்​தில் தரைப்பாலம் அடித்​துச் செல்​லப்​பட்​டது.

இதையடுத்து, கிராம மக்களின் போக்கு​வரத்​துக்காக தற்காலிகமாக தரைப்​பாலம் அமைக்​கப்​பட்​டது. இந்த தரைப்​பால​மும், பாலாற்றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்படும்​போதெல்​லாம் சேதமடைவதும், இதனால், கிராம மக்களின் போக்கு​வரத்து பாதிக்​கப்​படு​வதும் என கடந்த 9 ஆண்டு​களாக நடந்து வருகிறது. இந்நிலை​யில், இரும்​புலிச்​சேரி-நெரும்​பூர் இடையே உயர்​மட்ட பாலம் அமைக்​கப்​படும் என்று 2017-ம் ஆண்டு அறிவிக்​கப்​பட்​டது.

இரும்புலிச்சேரி பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால்
தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

2023-ம் ஆண்டு ரூ.40.33 கோடி மதிப்​பில் உயர்​மட்ட மேம்​பாலம் அமைக்​கப்​படும் என தமிழக அரசு அறிவித்​தது. இதன்​பேரில், கடந்த ஜனவரி மாதம் மேம்​பாலத்​தின் கட்டுமான பணிகள் தொடங்​கப்​பட்டன. ஆனால், பணிகள் மந்தக​தி​யில் நடைபெற்று வருவதாக கூறப்​படு​கிறது. இந்நிலை​யில், சமீபத்திய மழை​யால் பாலாற்றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்பட்​டு தற்காலிக தரைப்​பாலம் மீண்​டும் தண்ணீரில் மூழ்​கி​யது. அதனால், கிராம மக்களின் போக்கு​வரத்தை கருத்​தில்​கொண்டு மேம்பால பணிகளை விரைவாக மேற்​கொள்ள வேண்​டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்​துள்ளனர்.

பொன்னையன்

இதுகுறித்து, இரும்​புலிச்சேரியைச் சேர்ந்த பொன்னையன் கூறிய​தாவது: பாலாற்றில் தற்காலிகமாக அமைக்​கப்​பட்ட மண் சாலை வெள்​ளத்​தில் சேதமடைவது தொடர்​கதையாக உள்ளது. நிலைமை சீரானாலும்கூட சேதமடைந்த தரைப்​பாலத்​தில் வாகனங்​களில் செல்ல அச்சமாக உள்ளது. போக்கு​வரத்து தடைபடும் நேரங்​களில் கிராமத்​தில் அத்தி​யா​வசிய பொருட்​களுக்கு தட்டுப்​பாடு ஏற்படு​கிறது. இதை பயன்​படுத்தி, பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்​யும் நிலை​யும் ஏற்படு​கிறது.

தற்போது, எடையாத்​தூர் வழியாக சுமார் 6 கி.மீ. தொலைவு சுற்றிக்​கொண்டு நகரப்​பகு​திக்கு சென்று வரும் நிலை உள்ளது. அதனால், மேம்​பாலம் அமைக்​கும் பணிகளை விரைவாக மேற்​கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றார். இதுகுறித்து, நெடுஞ்​சாலைத்​துறை அதிகாரிகள் கூறிய​தாவது: இரும்​புலிச்​சேரி-நெரும்​பூர் இடையே தற்போது, பாலாற்றில் அதிகள​வில் தண்ணீர் செல்​வ​தால் கட்டுமான பணிகளை மேற்​கொள்ள ​முடியாத நிலை ஏற்​பட்​டுள்ளதாக தெரி​கிறது. எனினும், நீரோட்​டம் குறைந்​ததும் கட்டுமான பணி​கள் ​விரைவாக மேற்​கொள்​ளப்​படும்​ என்​றனர்​.

x