பல்லடத்தில் பரபரப்பு: போக்சோ வழக்கில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கைது


கைது செய்யப்பட்ட ராஜேஷ்

பல்லடம்: பல்லடத்தில் போக்சோ வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் இன்று (அக். 26) கைது செய்யப்பட்டார்.

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (47). பல்லடம் செந்தூரன் காலனியில் தங்கி, அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த பலர் அதே பகுதியில் வசித்து வந்தனர். அதில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவரின் 11 வயது சிறுமியை, ராஜேஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலியல் துன்புறுத்தல் செய்தார். இது தொடர்பாக சிறுமி, தனது தாயிடம் தெரிவிக்கவே அவர் பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போக்சோ வழக்கு பதிந்து ராஜேஷை தேடி வந்தனர். இந்நிலையில் கோவையில் வைத்து பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா தலைமையில் போலீஸார் ராஜேஷை இன்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

x