மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் கழுத்தை அறுத்து தற்கொலை 


தென்காசி: மனைவி கொலை வழக்கில் ஜாமீனில் வந்தவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி தெற்குமாசி வீதியில் இன்று முதியவர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்த அந்த வழியாகச் சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தென்காசி போலீஸார் விரைந்து சென்று, அவரை மீட்டு தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர்.

விசாரணையில் அவர், தென்காசி மாதா கோயில் தெருவைச் சேர்ந்த சந்திரன் (56) என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு தனது மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரன், சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்துள்ளார். மனைவியை கொலை செய்தால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x