டீ குடிக்க கூப்பிட்டதால் தகராறு: இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய தம்பதி கைது


சென்னை: சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெரு ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராகுல் (20). இவர் நேற்று முன்தினம் மதியம் வாலர்ஸ் சாலை - டேம்ஸ் சாலை சந்திப்பில் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ராகுலின் உறவினரான, அதே பகுதியை சேர்ந்த பிரபு (33), அவரது மனைவி காயத்திரி (26) இருவரும் அந்த வழியாக வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் ராகுல் டீ குடிக்க அழைத்துள்ளார்.

அப்போது, பிரபு, ‘ஓசி டீ குடிக்ககூப்பிடுறியா’ என கேட்டு, ராகுலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரபுவும், காயத்திரியும் கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து ராகுலை தாக்கி உள்ளனர். காயமடைந்த ராகுல் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து, ராகுல் கொடுத்த புகாரின் பேரில், சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் விசாரித்து, பிரபு, காயத்திரி மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

x