கத்தியைக்காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்ற நபர் கைது


கடுக்கா கார்த்திக்

சென்னை: சென்னை காசிமேடு அருகே இளைஞரிடம் கத்தியைக்காட்டி மிராட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை காசிமேடு புதுமனைக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக். இவர் இன்று அதிகாலை வீட்டினருகே உள்ள சிங்காரவேலன் நகர் சுரங்கப் பாதை அருகில் நடந்து சென்றபோது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கார்த்திக்கிடம் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனிடையே, கார்த்திக் பணம் தர மறுக்கவே அந்நபர் கார்த்திக்கை கையால் தாக்கி அவர் வைத்திருந்த பணம் ரூ.200-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து கார்த்திக் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் காசிமேடு போலீசாரால் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டனர். காசிமேடு காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட கார்த்திக் (என்கின்ற) கடுக்கா கார்த்திக் என்பவரை இன்று காலை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில் கடுக்கா கார்த்திக் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட கார்த்திக் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

x