ராமேசுவரத்தில் வட மாநில இளைஞர் போக்சோ வழக்கில் கைது


அலி நவாஸ்

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில இளைஞரை போலீஸார் போக்ஸோவில் கைது செய்தனர்.

உத்திரபிரதேச மாநிலம் முசாபர் நகரை சேர்ந்த அலி நவாஸ் (27). இவர் ராமநாதபுரத்தில் தனது நண்பர்களுடன் துணி வியாபாரம் செய்து வருகிறார். புதன்கிழமை ராமேசுவரம் சிவகாமி நகர் பகுதியில் துணி வியாபாரத்துக்கு சென்ற போது அங்கு விளையாடி கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமிக்கு அவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்தவர்கள், வடமாநில இளைஞர் அலி நவாஸை அடித்து, நகர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ராமேசுவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர் முத்துமீனாட்சி, வட மாநில இளைஞர் அலி நவாஸை போக்ஸோ வழக்கில் கைது செய்தார்.

x