சென்னை | ஜார்க்கண்ட் இளைஞரிடம் கத்திமுனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது


சென்னை: ஜார்க்கண்ட் மாநில இளைஞரிடம் கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பொலுவர்மா (25). இவர், சென்னை மாம்பலத்தில் தங்கிருந்து கூலி வேலை செய்து வருகிறார். இவர்கடந்த 6-ம் தேதி இரவு 11 மணியளவில் கே.கே.நகர், ராமசாமி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பொலுவர்மாவை கத்திமுனையில் மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். முதல் கட்டமாகசம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

இதில், வழிப்பறியில் ஈடுபட்டது போரூர் மதனந்தபுரம் நரேன் (24), கே.கே.நகர் அபிஷேக் (23), காட்டுப்பாக்கம், சரத்குமார் (23) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 3 பேரையும் தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

x