நடிகை சோனா வீட்டில் புகுந்த திருடர்கள் கத்தியை காட்டி மிரட்டி தப்பினர்


சென்னை: தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனா ஹைடன் (45). 2002-ல் ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றுள்ள இவர் ‘குசேலன்’ படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானார்.

இவர், மதுரவாயல் கிருஷ்ணா நகர் 2-வது பிரதான சாலை, 28-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் திருடர்கள் அவரது வீட்டின், சுற்றுச் சுவரைஎகிறிக் குதித்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர், வீட்டின் போர்டிகோவில் வைத்திருந்த ஏ.சி. இயந்திரத்தின் வெளிப்புற யூனிட்டை திருட முயன்றுள்ளனர்.

அப்போது சோனா வளர்க்கும் நாய் அவர்களைப் பார்த்து குறைத்துக் கொண்டே இருந்துள்ளது. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த சோனாவை திருடர்கள் அவர் கத்தி கூச்சலிட்டு விடக்கூடாது என்பதற்காக, கத்திமுனையில் மிரட்டிவிட்டு பின்னர்அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்து நடிகை சோனா தரப்பில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மதுரவாயல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A post shared by Hindu_Tamil (@hindu_tamil)

x