வனப்பகுதியில் இருந்து 2 பேரின் எலும்பு கூடுகள் மீட்பு - அரூர் போலீஸார் விசாரணை


அரூர்: தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாம்பாடி இளையான்குளம் வேடியப்பன் கோயில் பகுதியில் வனக்காப்பாளர் குப்புசாமி ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது வேடியப்பன் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில், அடையாளம் தெரியாத இரண்டு எலும்பு கூடுகள் கிடந்துள்ளன.

அருகில், புடவை, லுங்கி மற்றும் மருந்து பாட்டில் ஆகிவற்றுடன் 2 செருப்புகளும் கிடந்தன. இது குறித்து அரூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வனப்பகுதிக்கு சென்று எலும்பு கூடுகள் உள்ளிட்டவற்றை மீட்டு விசாரித்து வருகின்றனர்.

x