மதுரையில் வீடியோ வெளியிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை - அவதூறு பரப்பியதால் விரக்தி


மதுரை: மதுரையில் தனக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் பற்றி வீடியோ வெளியிட்டு ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை பைக்காரா பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(26). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்தார்.

10 நாளாக ஆட்டோ சவாரிக்காக வெளியூர் சென்றிருந்தார். அப்போது , பைக்காரா பகுதியைச் சேர்ந்த ஓரிரு ஓட்டுநர்கள் பிரகாஷுக்கு எதிராக அவதூறான கருத்துகளை பரப்பி உள்ளனர். இது தொடர்பாக பிரகாஷின் நண்பர்கள் 2 பேர் அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனால் விரக்தி அடைந்த பிரகாஷ் தனக்கு எதிராக அவதூறு பரப்பியர்கள் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில், மதுரை அச்சம்பத்து பகுதியிலுள்ள ஷெட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது. இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

x