கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது


கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். பர்கூர் அருகே தனியார் பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் போலி என்சிசி முகாம் நடந்தது.

இதில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், போலி பயிற்சியாளர் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான என்சிசி போலி பயிற்சியாளர் சிவராமன் என்பவர் எலி பசை சாப்பிட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிந்தார்.

இந்நிலையில், இவ்வழக்கில் காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த ரவி (30) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

x