சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவம்: சத்தீஸ்கர் தொழிலாளர்கள் இருவர் கைது


ஸ்ரீவில்லிபுத்தூர்: சங்கரன்கோவில் அருகே பாம்பகோவில் சந்தை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கல் வைத்த சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இரு தொழிலாளர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

செங்கோட்டை - சென்னை இடையே இயக்கப்படும் பொதிகை விரைவு ரயில் கடந்த 25-ம் தேதி சென்னை சென்ற போது, கடையநல்லூர் - பாம்பகோவில் சந்தை ரயில் நிலையங்களுக்கு இடையே சென்ற போது, தண்டவாளத்தில் இருந்த கல் மீது மோதி இன்ஜினின் முன்பக்க தகடு சேதமடைந்தது.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் பணியாற்றி வரும், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய இருவரை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x