ஆபாச வீடியோ: சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதாக ரவுடி பேபி சூர்யாவிடம் விசாரணை


புதுச்சேரி: ஆபாச வீடியோ தொடர்பாக புகார் அளித்த சிறுமியின் குடும்பத்தை மிரட்டியதாக, யூடியூபர் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட மூவரிடம் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

புதுச்சேரியைச் சேர்ந்த சிறுமிஒருவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தார். அச்சிறுமியின் இன்ஸ்டாகிராம் ஐடிக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. நாளை டைவில் இருவரும் குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோக்களை பரி மாறுவது மூலம் நட்பாக பழகினர்.

அவர்கள் பழகிய சில நாட்களுக்குள் அந்த நபர் திடீரென சிறுமிக்கு பல்வேறு ஆபாச வீடியோக் கள் மற்றும் அந்த சிறுமியின் ஆபாச வீடியோவையும் அனுப்பி மிரட்டத் தொடங்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட அச்சிறுமி, இதுகுறித்து தனது தாயிடம் தெரி வித்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரது தாய் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டியது மதுரையைச் சேர்ந்த யூடியூபர் சிக்கந்தின் ஷா- சுமி தம்பதியின் மகன் அஷ்ரப் அலி (24) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அஷ்ரப் அலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்,

இதனிடையே சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப் படையில், அஷ்ரப் அலியின் சித்தியான யூடியூபர் ரவுடி பேபி திருச்சி சூர்யா மற்றும் சிக்கந்தின் ஷா, சுமி ஆகியோரை சைபர் க்ரைம் போலீஸார் நேற்று புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் ஆய்வாளர்கள் கீர்த்தி, தியாகராஜன் உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில் அவர்கள் மீது சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.

x