பேரையூரில் வீட்டில் கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது: 74 கிலோ கஞ்சா, டூவீலர்கள் பறிமுதல்


பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

மதுரை: மதுரை மாவட்டம், பேரையூரில் வீட்டில் கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 74 கிலோ கஞ்சா மற்றும் டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேரையூர் முக்குச்சாலை அருகே டிஎஸ்பி துர்கா தேவி தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில், அவ்வழியாக டூவீலரில் சென்ற பேரையூரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவரை பிடித்து விசாரித்தனர். அவரிடம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிந்தது. மேலும், அவரது டூவீலரில் இருந்து வங்கி பாஸ் புத்தகத்தை ஆய்வு செய்தனர். அதில் இருப்புத் தொகை அதிகமாக இருந்தால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. டிஎஸ்பி உள்ளிட்ட போலீஸார் வெங்க டேசன் வீட்டில் ஆய்வு செய்தனர்.

அங்கு சிறு, சிறு பாக்கெட்டுகளில் சுமார் 74 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வெங்கடேசன் மற்றும் அவருக்கு கஞ்சா விற்க உடந்தையாக இருந்த கே.சத்திரப் பட்டி முனியப்பன்(38), கிளாங்குளம் வெள்ளச் சாமி (23) ஆகிய 3 பேரையும் பேரையூர் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 74 கிலோ கஞ்சா மற்றும் டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.

x