நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!


கொலை நடந்த இடம்

பெங்களூருவில் நடுரோட்டில் மனைவியை ஓட ஓட விரட்டி கணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் பிரான்ஸிஸ். பெயின்டர். இவரது மனைவிக்கும், செல்வின் பிரான்ஸிசுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தனது கணவர் மீது 6 மாதங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் செல்வின் பிரான்ஸிஸ் மனைவி புகார் கொடுத்திருந்தார்.

அத்துடன் கணவருடன் பிரிந்து வெங்கடாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மனைவியை, செல்வின் பிரான்ஸிஸ் சாலையில் தடுத்து நிறுத்தியுள்ளார். அத்துடன் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அத்துடன் மறைத்து வைத்திருந்த கத்தியை மனைவியைக் குத்த ஆரம்பித்தார். இதனால் செல்வின் பிரான்ஸிசிடமிருந்து அவரது மனைவி தப்பித்து ஓடினார்.

ஆனால், சாலையில் விடாமல் துரத்தி துரத்தி அவரது மனைவியைக் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவரது மனைவி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த கோரமங்களா போலீஸார் விரைந்து வந்து, கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு செயின்ட் ஜான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொடூரக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்வின் பிரான்ஸிசை தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தனது மனைவியை ஓட ஓட விரட்டி கணவனே குத்திக்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x