பெரும் துயரம்... பிரசவத்தின்போது தாய், பச்சிளம் குழந்தை உயிரிழப்பு


உத்திரமேரூர் அருகே பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் பிறந்த குழந்தையும் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே பெருநகர் பழைய காலணியை சேர்ந்த ரகோத்தமனின் மனைவி சத்யாவிற்கு பிரசவவலி ஏற்பட்டதால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனர். நேற்று நள்ளிரவு சத்யாவிற்கு பிரசவம் பார்க்கப்பட்ட நிலையில் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சத்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாகவே தாயும், சேயும் உயிரிழந்துவிட்டதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.3000 வழங்க வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

x