கோர விபத்து... ஆட்டோ மீது மினி வேன் மோதி 8 பேர் பலியான சோகம்!


மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பயணிகள் சென்ற ஆட்டோ மீது மினிவேன் மோதிய கோர விபத்தில் சம்பவம் இடத்திலேயே 8 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து மினி வேன் ஒன்று மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் கல்யாணை நோக்கி சென்று கொண்டிருந்தது. புனே மாவட்டத்தில் உள்ள ஜோகாவிற்கு மின்வேன் சென்று கொண்டிருந்த போது, திடிரேன கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது பயங்கர வேகத்தில் மோதி பெரும் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணித்த 7 பேர், மினி வேன் ஓட்டுநர் என மொத்தம் 8 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

x