சிறுமிக்கு பாலியல் தொல்லை: கோவை ஆசிரியை ‘போக்சோ’வில் கைது


கோவை: கோவை உடையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்யா (32). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த 6 மாதங்களாக அன்னூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியின் தாய், ஆசிரியை சவுந்தர்யா மீது அன்னூர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில் சிறுமிக்கு சவுந்தர்யா பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, ஆசிரியை சவுந்தர்யா மீது ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

x