கோவை பெண் விமானிக்கு பாலியல் தொல்லை - இன்ஜினியர் மீது வழக்கு


கோவை: கோவையைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர், மத்திய பகுதி அனைத்து மகளிர் போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதில், ‘‘நான் விமானியாக பணியாற்றி வந்தேன். ஆனந்தராஜ்(37) என்பவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. இன்ஜினியரான இவர், மனைவியை பிரிந்து வசித்து வருவதாகவும், விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

விவாகரத்து பெற்றதும், என்னை திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் அவரது வீட்டுக்கு அழைத்த ஆனந்தராஜ் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு எனக்கு மிரட்டல் விடுத்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார். அதன் பேரில், ஆனந்தராஜ் மீது போலீஸார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

x