சிவகங்கையில் கஞ்சா வைத்திருந்த 3 கல்லூரி மாணவர்கள் கைது


சிவகங்கை: சிவகங்கை பகுதியில் நகர் போலீஸ் உதவி ஆய்வாளர் வைரமணி தலைமையிலான போலீஸார் செப்.22-ம் தேதி இரவு ரோந்துசென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் என 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் விற்பனை செய்வதற்காக தலா 100 கிராம் எடையுள்ள 19 கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தனர். அவர்கள் மூவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 19 கஞ்சா பொட்டலங்கள், 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

x