பழநியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு


பழநி: பழநியை அடுத்த நெய்க்காரப் பட்டியில் உள்ள கே.வேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி மருதமுத்து (43). இவரை செப்.23-ம் தேதி முதல் காணவில்லை.

இந்நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த தனியார் தோட்டத்தில் உள்ள கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஓர் ஆண் இறந்து கிடந்தது குறித்து, பழநி தாலுகா போலீஸார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு விசாரித்தனர். அந்நபர் மருதமுத்து எனத் தெரிய வந்தது. அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசி சென்றனரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

x