கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில் கணவர் உயிரிழப்பு: மனைவி கைது @ பாளையங்கோட்டை


திருநெல்வேலி: கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். பாளையங்கோட்டை அருகே பர்கிட் மாநகரம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சிவபெருமாள் (40) என்பவருக்கும், அவருடைய மனைவி கலைச்செல்வி (39) என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடைபெறுவது வழக்கம்.

கடந்த 22-ம் தேதி அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டபோது, சிவபெருமாள் கொதிக்கும் எண்ணெயை தனது தலையில் ஊற்றிக்கொண்டதாக கலைச்செல்வி தெரிவித்திருந்தார். இதில் பலத்த காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட சிவபெருமாள் அடுத்த நாள் இரவில் உயிரி ழந்தார்.

இதுகுறித்து, சிவபெரு மாளின் தாயார் பேச்சியம்மாள், பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக, காவல் ஆய்வாளர் ராஜகுமாரி மேற்கொண்ட விசாரணையில், கொதிக்கும் எண்ணெயை சிவபெருமாள் மீது ஊற்றியது கலைச்செல்விதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கலைச்செல்வியை போலீஸார் கைது செய்தனர்.

x