மகளையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை: 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிப்பு 


மகாராஷ்டிரா: தனது ஒன்பது வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு, தானே மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தானே மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி இல்லாதபோது, மற்ற குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டு தனது 9 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

ஆகஸ்ட் 2020 இல், சிறுமியின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த பக்கத்து வீட்டுக்காரர், சிறுமியிடம் விசாரித்தபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனையடுத்து 20 வயதான பக்கத்து வீட்டுக்காரர் போலீஸை அணுகி, இது தொடர்பாக புகாரளித்தார்.

இதுகுறித்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவ்வழக்கில் பக்கத்து வீட்டுக்காரர் உட்பட ஆறு அரசு தரப்பு சாட்சிகள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டன. ஆனால், சிறுமியும் அவரது தாயும் சாட்சி சொல்லவில்லை.

இதனையடுத்து நேற்று தானே மாவட்டத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி டிஎஸ் தேஷ்முக் தனது உத்தரவில், 35 வயதான அந்த குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்தார்.

x