லஞ்சம், கூடாநட்பு புகார்கள்: இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் இடமாற்றம்; 2 பேர் சஸ்பெண்ட் @ திருச்சி


திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். காணக் கிளியநல்லூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக இருந்தவர் ஜெயக்குமார். இவர்கள் சாதிப்பற்றுடன் செயல்படுவதாக வந்த புகார்களின்பேரில், சண்முகசுந்தரத்தை திருச்சி கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றியும், ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்தும் எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டார்.

இதேபோல, திருவெறும்பூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய எஸ்.கிருஷ்ணமூர்த்தி வழக்குகளை விசாரிக்க லஞ்சம் வாங்குவதாகவும், துறையூர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிய பி.சத்தியராஜ் ஏற்கெனவே 2 திருமணங்கள் செய்திருந்த நிலையில், 3-வதாக ஒரு பெண்ணை கூடா நட்பில் இருக்க வற்புறுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. இவற்றை விசாரித்த எஸ்.பி.வருண்குமார், புகார்களுக்குள்ளான கிருஷ்ணமூர்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றியும், சத்தியராஜை பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.

x