குஜராத்தில் கொடூரம்: 10 மாத குழந்தை பலாத்காரம்!


நாடு முழுவதும் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் 10 மாத பெண் குழந்தையை 30 வயதுடைய இளைஞன் ஒருவன் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பனோலி கிராமத்தில் கடந்த செப்டம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 10 மாத பெண் குழந்தையை தூக்கிச் சென்ற 30 வயது இளைஞன் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது.

தீபக் குமார் லால்பாபு சிங் என அடையாளம் காணப்பட்ட இளைஞன், பனோலி கிராமத்தில் தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு குஷால் ஓசா கூறினார்.

உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வந்த குழந்தையின் தாயாரையும், அவரது குடும்பத்தினருக்கும் தீபக் குமார் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர் என்றும், பல சந்தர்ப்பங்களில் குழந்தையுடன் விளையாடுவதற்காக அவர்களது வீட்டிற்கு தீபக் குமார் வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் வந்திருந்த தீபக் குமார், வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை வீட்டிற்கு வெகு தொலைவில் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் ஓடிச் சென்று பார்த்த குழந்தையின் பாட்டி, குழந்தையின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிவதையும், குழந்தை பலத்த காயம் அடைந்திருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், தீபக் குமாரைப் பிடித்து நையபுடைத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த குழப்பமான செய்தியைக் கேட்டு சம்பவ இடத்திற்கு பதறியடித்துக் கொண்டு விரைந்த குழந்தையின் தாய், குழந்தையை மீட்டு உடனடியாக பாரூச் சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் பலத்த காயங்கள் காரணமாக குழந்தையின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக கூறி, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தீபக் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

x