பெரும் துயரம்... காரை நொறுக்கிய டிரக்... விபத்தில் புதுமணத் தம்பதி உட்பட 5 பேர் உயிரிழப்பு


சத்தீஸ்கரில் ஏற்பட்ட கார் விபத்தில் புதுமண தம்பதி உள்பட ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம், முல்மலா அருகே உள்ள பலோடா கிராமத்தைச் சேர்ந்த சுபம் சோனிக்கு ஷிவ்ரி நாராயணன் பகுதியைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த சனிக்கிழமை இரவு திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி இருவரும், அவர்களது குடும்பத்தினர் மூவர் உள்பட காரில் பயணித்தனர். அதிகாலை நேரத்தில் எதிரில் வந்த டிரக்குடன் நேருக்கு நேராக கார் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மணமகள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். மணமகன் காயங்களோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார். மணமகனின் தந்தை ஓம் பிரகாஷ் சோனி காரை ஓட்டி வந்துள்ளார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிரக்கை ஓட்டி வந்த ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் டிரக் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

x