பாலியல் தொல்லை வழக்கில் நாமக்கல் அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் கைது


நாமக்கல்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், நாமக்கல் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியரை, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

நாமக்கல் திருச்சி சாலை தில்லை நகரைச் சேர்ந்தவர் பிரதாப் (44). இவர் நாமக்கல் லத்துவாடியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், இவர் கல்லூரி மாணவியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், நாமக்கல் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரதாப்பை கைது செய்தனர்.

x