பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவர் கைது @ தஞ்சாவூர்


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(48). இவரிடம் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கிய கூலித் தொழிலாளி ஒருவர் கடந்த 4 மாதங்களாக வட்டி பணத்தை கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

இதனால், செந்தில்குமார் நேற்று முன்தினம் இரவு கூலித் தொழிலாளியின் வீட்டுக்கு சென்றபோது, வீட்டில் கூலித் தொழிலாளியின் மனைவி மட்டும் இருந்துள்ளார். அவரிடம் செந்தில்குமார் வட்டி பணத்தை கேட்டபோது, தன்னிடம் ரூ.5 ஆயிரம் தான் உள்ளது.மீதி பணத்தை கொஞ்ச நாளில் கொடுத்து விடுகிறேன் எனக் கூறி ரூ.5 ஆயிரத்தை செந்தில்குமாரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது, செந்தில்குமார் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக, பாப்பாநாடு போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர்

x