விறகு வெட்டும் தொழிலாளி கழுத்தறுத்து படுகொலை: திருப்புவனம் அருகே பயங்கரம்


சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து மறியலில் ஈடுபட்ட கொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள், விடுதலை சிறுத்தை கட்சியினர்.

சிவகங்கை: திருப்புவனம் அருகே விறகு வெட்டும் தொழிலாளியை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யாததால் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சிவகங்கையில் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பாப்பாக்குடியைச் சேர்ந்த விறகும் வெட்டும் தொழிலாளி காளையார் (55). இவர் நேற்று காலை கண்மாய் பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பூவந்தி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, குற்றவாளிகள் கைது செய்யாததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் பாலையா தலைமையில் அக்கட்சியினர் மற்றும் உறவினர்கள், உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலை கதிரவன், டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையிலான போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தினர். ஆனால் அவர்கள் சாலையோரம் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

x