பயிற்சி வகுப்புக்குச் சென்ற 11 வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை: பொதுமக்களிடம் சிக்கிய குற்றவாளி


உத்தரப்பிரதேசம்: பயிற்சி வகுப்புக்குச் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவி, 26 வயது இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

ஃபதேபூர் காவல் நிலையப் பகுதியில் நேற்று 11ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி பயிற்சி வகுப்புக்குச் சென்றுள்ளார். அப்போது முகமது அஃப்தாப் எனும் இளைஞன் ஏதோ காரணம் கூறி ஏமாற்றி அந்த சிறுமியை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சந்தேகம் வராமல் இருக்க, அந்த வீடு வெளியில் இருந்து பூட்டப்பட்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து, மூடிய வீட்டிற்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். அப்போது சிலர் பூட்டை உடைத்து அஃப்தாப் மற்றும் அவரது நண்பரை பிடித்தனர். அஃப்தாப் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவரது நண்பர் தப்பியோடிவிட்டார். அந்த சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து தந்தையின் புகாரின் பேரில் அஃப்தாப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோட்வாலி இன்ஸ்பெக்டர் டி கே சிங் தெரிவித்தார். மேலும், "குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்கப்பட்டு, இந்த விவகாரம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது" என்று அவர் கூறினார்.

x