கணவர் தினமும் குளிப்பதில்லை என விவாகரத்து கேட்கும் புதுமணப்பெண்: ஆக்ராவில் சுவாரஸ்ய வழக்கு


உத்தரபிரதேசம்: ஆக்ராவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் தினமும் குளிப்பதில்லை என்ற காரணத்துக்காக விவாகரத்து கோரியுள்ளார். திருமணமான ஒரே மாதத்தில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஆக்ராவை சேர்ந்த ராஜேஷ் என்பவர் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அவரது உடலின் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாமல் மனைவி விவாகரத்து முடிவை எடுத்துள்ளார். ராஜேஷ் எனும் அந்த நபர் கங்கை நதியிலிருந்து தண்ணீரை எடுத்து வாரத்திற்கு ஒரு முறை தன்மீது தெளித்துக்கொள்வார். இதனால் தான் சுத்தமானதாக அவர் நம்பியுள்ளார். திருமணம் செய்துகொண்ட பிறகு, ராஜேஷ் மனைவியின் வற்புறுத்தலின் காரணமாக கடந்த 40 நாட்களில் ஆறு முறை மட்டுமே குளித்துள்ளார்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் வரதட்சணை துன்புறுத்தல் புகார் அளித்து விவாகரத்து கோரினர். குடும்ப நல மைய ஆலோசகரின் ஆலோசனையை தொடர்ந்து, ராஜேஷ் இறுதியில் மனம்திருந்தி தினமும் குளிப்பதற்கும், சுத்தமாக இருக்கவும் ஒப்புக்கொண்டார். ஆனாலும், அந்தப் பெண் இனி அவருடன் வாழ விரும்பவில்லை என்று தெரிவிதுள்ளார். இந்த ஜோடி ஒரு வாரத்தில் மீண்டும் ஆலோசனை மையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

x