சென்னை | பெண் அலுவலருக்கு கொலை மிரட்டல்: ரவுடி கைது


சென்னை: டிஜிபி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வருபவர் அனுசுயா. கடந்த2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து ரவுடிபாண்டுரங்கன் உட்பட மேலும் சிலரை கைதுசெய்தனர். பின்னர், இந்த வழக்கிலிருந்து நீதிமன்றத்தால் பாண்டுரங்கன் விடுவிக்கப்பட்டுள்ளார். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பணி முடிந்து டிஜிபி அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அனுசுயாவை ரவுடி பாண்டுரங்கன் பின் தொடர்ந்து சென்று வழிமறித்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

அனுசுயா அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை போலீஸார் ரவுடி பாண்டுரங்கன் (40),அவரது கூட்டாளி ராமச்சந்திரன் (50) ஆகியோரைகைது செய்து விசாரித்து வருகின்றனர்.

x