காதலனின் கண்முன்னே சீரழிக்கப்பட்ட காதலி... கேரள இளைஞர்கள் செய்த அட்டூழியம்!


காதலனுடன் உற்சாகமாக கேரள பகுதிக்கு சென்ற தமிழக பெண்ணை கேரள இளைஞர்கள் இருவர் காதலனை அடித்து துன்புறுத்தி அவர் கண் முன்னேயே பெண்ணை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண். இவர் நித்திரவிளை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனால் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காதலர்கள் இருவரும் கேரளா மாநிலம் பருத்தியூர் என்னும் இடத்தில் உள்ள பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களுடன் காதலனின் நண்பரான ஒருவரையும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இரவு நேரம் அவர்கள் மூன்று பேரும் அங்குள்ள பகுதிகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் காதலனையும் அவரது நண்பரையும் கடுமையாக தாக்கியதோடு இருவரையும் நிர்வாணமாக்கியுள்ளனர். மேலும் காதலியையும் மிரட்டி ஒருவர் பின் ஒருவராக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை

அதனை வீடியோவாக எடுத்து தனது மற்ற நண்பர்களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி உள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

x