எங்கள் பிரச்சினையில் ஏன் தலையிடுகிறாய்! ஆன்லைன் டெலிவரி ஊழியர் மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல்


சென்னையில் ஆன்லைன் டெலிவரி ஊழியர் ரவுடி கும்பலால் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அசோக்நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (25) என்ற இளைஞர் பிரபல ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த மகேஷ் என்ற ரவுடிக்கும், ஏழுமலை என்ற நபருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இருவரின் பிரச்சினையை பேசி முடிக்க ஏழுமலை தரப்பினர், தினேஷின் நண்பரான சந்தோஷ் என்பவரை நாடியுள்ளனர். இந்த விஷயம் ரவுடி மகேஷின் கும்பலுக்கு தெரியவந்தது.

இந்நிலையில், தினேஷ் தனது நண்பர் சந்தோஷிற்காக அசோக் நகரில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ரவுடி மகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் தினேஷிடம் பிரச்சினை செய்துள்ளனர். தொடர்ந்து தங்கள் பிரச்சினையில் ஏன் தலையிடுகிறாய் என்று கேட்டுள்ளனர்.

பின்னர், தினேஷை ஓடஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டினர். பொதுமக்கள் கூடியதை அடுத்து ரவுடி மகேஷ் தனது கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பினார். தகவலறிந்து வந்த போலீஸார், தினேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் வழக்கு பதிந்து, ரவுடி மகேஷ் உள்ளிட்ட 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x