மானாமதுரை அருகே அடுத்தடுத்த கோயில்களில் வெள்ளி கவசம், பணம் திருட்டு


கோப்புப் படம்

மானாமதுரை: மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் பழமையான முத்தையா அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் செப்.8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. செப்.10-ம் தேதி இரவு வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிலையில் நேற்று காலை கோயிலை திறக்கச் சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு கோயிலில் இருந்த 5 கிலோ வெள்ளிக் கவசம், குத்து விளக்குகள், மணிகள் திருடப்பட்டிருந்தன.

அதே போல் அருகேயுள்ள மதுரை வீரன் கோயிலிலும் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருடப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்து 3 நாட்களில் கோயிலில் திருடு போனது அப்பகுதி குடியிருப்புவாசிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

x