மகாராஷ்டிரா: சந்திராபூரில் உள்ள ஒரு ஹோட்டலில் உருளைக்கிழங்கு பெட்டிக்குள் இருந்து 8 அடி நீள மலைப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.
சந்திராபூர் அருகே உள்ள லோஹாராவில் உள்ள ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த காய்கறி பெட்டிக்குள் மிகப்பெரிய மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வெளியான வீடியோவில், மலைப்பாம்பு பெட்டியில் உருளைக்கிழங்குகளின் மேல் சுருண்டிருப்பதைக் காணலாம்.
ஹோட்டலில் பணியாற்றும் ஒருவர் உருளைக்கிழங்கு எடுக்கச் சென்றபோது, பாம்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக தொழிலாளி பயந்து வெளியே ஓடியதால், பெட்டியில் பாம்பு இருந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது.
பின்னர் ஹோட்டல் உரிமையாளர் உடனடியாக உள்ளூர் பாம்பு பிடிப்பவருக்கு தகவல் கொடுத்தார். அவர் உருளைக்கிழங்கு பெட்டியில் இருந்து பாம்பை சாக்குக்குள் கொண்டுவந்து பிடித்தார். பின்னர் அவர்கள் லோஹாரா வனப்பகுதியில் மலைப்பாம்பை விடுவித்தனர்.
सब्जी बनाने के लिए आलू लेने गया था कर्मचारी..
— Live Dainik (@Live_Dainik) September 11, 2024
महाराष्ट्र: चंद्रपुर शहर के पास लोहारा के एक होटल में आलू के डिब्बे में 8 फीट बड़ा अजगर मिलने से सनसनी फैल गई. इसकी सूचना होटल मालिक को दी गई, जिसके बाद सर्प मित्र को बुलाकर अजगर को पकड़ उसे लोहारा जंगल में छोड़ दिया गया.… pic.twitter.com/rkrDVHXh1w