அதிர்ச்சி... திமுக பெண் கவுன்சிலர் மீது கொலை வெறித் தாக்குதல்!


திமுக பெண் கவுன்சிலர் சித்ரா

கோவையில் வீடு புகுந்து திமுக பெண் கவுன்சிலர், அவரது கணவர், மகன் ஆகியோர் மீது மர்ம கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மன்ற 3-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த சித்ரா. இவர் அவ்வைநகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று இரவு 10.30 மணியளவில், அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று திமுக பெண் கவுன்சிலர் சித்ரா, கணவர் ரவி மற்றும் மகன் என 3 பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளது.

தாக்குதல் நடத்திய கும்பல் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிவிட்டது. பலத்த காயம் அடைந்த 3 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

x