சமூக வலைதளங்களில் அரிவாளுடன் வீடியோ வெளியிட்ட இளைஞர் கைது


தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் அருண்குமார் (27) என்பவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கையில் அரிவாளுடன் சமூக நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் விதமான ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி அருண்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிவாள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

x