முதுகுளத்தூர் அருகே காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தவர் கொலை


மோகன்

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுச் சென்றபோது மர்மக் கும்பலால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புழுதிக்குளத்தில் கடந்த மே 30-ம் தேதி கோபால்சாமி(40) என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினர் மோகன்(48) உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மோகன் நிபந்தனை ஜாமீனில் சிறை யிலிருந்து வெளியே வந்தார். கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதியிலிருந்து கீழத்தூவல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

நேற்று பிற்பகல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு, அப்பகுதியில் மோகன் நடந்துசென்று கொண்டிருந்தார். அங்கு பைக்கில் வந்த மர்மக் கும்பல் மோகனை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து தப்பி யோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

x