கூகூரில் டாஸ்மாக் கடை உதவியாளரை அரிவாளால் வெட்டி ரூ.48 ஆயிரம் பணம் பறிப்பு


ஏஐ ஜெனரேட் செய்த பிரதிநிதித்துவ படம்

திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் வட்டம், கூகூரில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளராக கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முருகேசன் பணியாற்றி வருகிறார்.

இவர், பிளாஞ்சேரியைச் சேர்ந்த நிறைகுடத்தான் மகன் டேனியல் ராஜ் (54) என்பவரை தனக்கு உதவியாளராக வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அந்தக் கடையை மூடிவிட்டு டாஸ்மார்க் மதுபானம் விற்பனை செய்த ரூ.48 ஆயிரம் பணத்தை
டேனியல் ராஜிடம் கொடுத்து எடுத்து வரச் சொல்லிவிட்டு, முருகேசன் தனியாக தனது இருசக்கர வாகனத்தில் முன்னால் சென்று கொண்டிருந்தார். பின்னால் மற்றொரு இரு வாகனத்தில் டேனியல் ராஜ், பணத்துடன் சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் நாச்சியார்கோவில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கூச்சலிடும் சத்தம் கேட்டு முருகேசன் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி பார்த்தபோது, பின்னால் வந்த டேனியல் ராஜை மர்ம நபர்கள் 2 பேர் அரிவாளால் வெட்டி அவரிடம் இருந்த ரூ.48,000 பணத்தை பறித்து சென்றது தெரிய வந்தது. பலத்த காயமடைந்த அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x