பட்டினப்பாக்கம் கோயில் திருவிழா தகராறில் மீனவரை அடித்து கொலை செய்த இளைஞர் கைது


கைது செய்யப்பட்ட பரத்

சென்னை: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேசப்பன் (51). மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2-ம்தேதி அதிகாலை வீட்டருகே உள்ளதுலுக்கானத்தம்மன் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரத் (28) என்பவர் தனதுநண்பர்களுடன் சேர்ந்து சத்தம்போட்டுக் கொண்டு நடனம் ஆடியுள்ளார். இது கோயில் விழாவை ரசித்துக் கொண்டிருந்தவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளது.

இதை தேசப்பன் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது தகராறாக மாறியது. ஆத்திரமடைந்த பரத் சரமாரியாகத் தாக்கியதில், பலத்த காயம்அடைந்த தேசப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்தஅவர் நேற்று முன்தினம் இறந்தார். இக்கொலை தொடர்பாக பட்டினப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் பரத்தை கைது செய்தனர்.

x