சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தற்கொலை


சென்னை: விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை விமான நிலையத்தில் டெலிகாம் எனப்படும் தகவல் தொடர்பு துறையில் கண்காணிப்பு அதிகாரியாகப் பணி யாற்றியவர் நிர்மலா (59). இவர் 5 மாதத்தில் ஓய்வுபெற இருந்தார். நேற்று முன்தினம் பழவந்தாங்கல் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து இரவு பணிக்கு வந்துள்ளார்.

நேற்று காலை 6.30 மணி வரைஅலுவலக அறையை விட்டு அவர் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த சக ஊழியர்கள் அறையின் கதவை பலமுறைதட்டியுள்ளனர். ஆனால், அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து, உள்நாட்டு விமானநிலைய மேலாளர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீஸார் வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது, அவர் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்ட நிலையில் இருந்தார். போலீஸார்உடலை கைப்பற்றி பிரேதப்பரி சோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

x