சென்னை | ரூ.50 லட்சம் வழிப்பறி: வழக்கில் பிரபல கொள்ளையனுக்கு 2 நாள் போலீஸ் காவல்


சென்னை: சென்னை ஏழுகிணறு, பெரியண்ணா முதலிதெருவில் வசித்து வருபவர் நவாஸ்கான் (65).இவர் ஈவ்னிங் பஜாரிலுள்ள செல்போன் வாங்கிவிற்கும் கடையில் கடந்த மாதம் 3-ம் தேதிஇரவு, வேலை முடித்து, வசூல் பணம் ரூ.50 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கும்பல் நவாஸ்கானை தாக்கிவிட்டு கத்தி முனையில் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியது.

இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து செங்குன்றம் நாகராஜ் (34), அதேபகுதி தீபக் (24) ஆகிய இருவரை கடந்த 12-ம் தேதி கைது செய்தனர். கார்த்திக் (31) என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் தொடர்ச்சியாக பிரபல கொள்ளையனான ஹவாலா சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் மேலும் விசாரணை நடத்தும் வகையில் சிறையில் உள்ள சுரேஷை காவலில்எடுத்து விசாரிக்க போலீஸார் விண்ணப்பித்தனர். இந்நிலையில், சுரேஷை 2 நாள் காவலில் விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

x