11 வயது பழங்குடி இன சிறுமி தொடர் பாலியல் பலாத்காரம்


பாலியல் பலாத்காரம்

ஆந்திர மாநிலத்தில் 11 வயது பழங்குடியின சிறுமி தொடர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆனது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தலைநகர் அமராவதியின் அருகே அமைந்துள்ள மங்களகிரி நகரில் வசிக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளார். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மங்களகிரி போலீஸார், லக்‌ஷ்மணன் என்பவர் உட்பட 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

இளைஞர்கள் இருவரும், 11 வயது சிறுமியை அச்சுறுத்தி கடந்த சில வாரங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் பதிவாகி உள்ளது. பயம் காரணமாக தனக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்து வீட்டில் தெரிவிக்காது இருந்த சிறுமி, 2 வாரத்துக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல் நீடிக்கவே, அது குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பலாத்காரத்துக்கு ஆளான சிறுமி உடலளவில் பாதிக்கப்பட்டிருப்பதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைதான 2 இளைஞர்களுக்கும் அப்பால், சிறுமியின் உறவினர் ஒருவருக்கும் இந்த பலாத்காரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, தலைமறைவான அந்த நபரையும் மங்களகிரி போலீஸார் தேடி வருகின்றனர்.

x