சென்னை | டிபிஐ வளாகத்தில் உள்ள விடுதியில் காப்பர் திருடியதாக 5 பேர் கைது


சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளிக் கல்வித்துறை அலுவலகமான டிபிஐ வளாகம் செயல்பட்டு வருகிறது. பயிற்சிக்கு வரும் விரைவுரையாளர்கள், ஆசிரியர்கள் தங்குவதற்கு அரசுக்கு சொந்தமான விடுதியும் இங்கு உள்ளது. இந்த விடுதியில் உள்ள 11 ஏ.சி. இயந்திரங்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 9 கிலோ எடை கொண்ட காப்பர் உருளைகள் கடந்த 26-ம் தேதி திருடுபோனது.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்டமாக சம்பவ இடம் மற்றும் அதைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி துப்பு துலக்கினர்.

இதில், டிபிஐ வளாகத்தில் திருட்டில் ஈடுபட்டது சென்னை ஆயிரம் விளக்கு சுதந்திரா நகரை சேர்ந்த ஜீவா (19), தேவன் (19), வெங்கடேசன் (18) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர். இந்த திருட்டு தொடர்பாக 16 வயதுடைய 2 சிறார்களும் கைது செய்யப்பட்டனர்.

x