வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் @ அரியலூர்


அரியலூரில் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.

அரியலூர்: நெல்லை வழக்கறிஞர் கொலையைக் கண்டித்து அரியலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் சரவணராஜ் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ஓசூர் வழக்கறிஞர் காளியப்பன் தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தியும், 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அரியலூர் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் இன்று மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். செந்துறை நீதிமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு செந்துறை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கார்ல்மாக்ஸ் தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் நீதிமன்றம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு ஜெயங்கொண்டம் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

x